Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

ஜன.,24 ஆம் தேதி தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு?

ஜன.,24 ஆம் தேதி தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு?
தமிழகத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி நீட் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைலைட்ஸ்:
தமிழகத்தில் ஜனவரி 24 நீட் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு.
தமிழகத்தில் மொத்தம் 2541 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்குபெற ஜனவரி 17 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 24ஆம் தேதி நீட் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய கோட்டா வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜனவரி 27 அன்று தொடங்கி ஜனவரி 23 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்த நாள் முதல் மாநில கோட்டாவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி நீட் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2541 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வேண்டிய கலந்தாய்வு கொரோனா காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக நீட் முதல்நிலை கலந்தாய்வு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நடத்த முடியவில்லை.

இதை தொடர்ந்து நீட் முதுநிலை கலந்தாய்வு நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில், நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணையில் ஜனவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியது.
அதைத்தொடர்ந்து அகில இந்திய கோட்டா முதல் கட்ட கலந்தாய்வில் பங்குபெற ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இடங்கள் ஒதுக்கப்பட்டு ஜனவரி 22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன் பின் தமிழ்நாட்டில் மாநில கோட்டாவுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. முது நிலை படிப்பில் மாநிலத்தில் உள்ள மொத்த இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்கப்படும்.
இதற்கிடையில், மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), NEET UG 2021 மாநிலங்களுக்கான கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. MCC ஆல் நடத்தப்படும் ஆன்லைன் UG கவுன்சிலிங் மற்றும் அந்தந்த மாநில கவுன்சிலிங் அதிகாரிகளால் நடத்தப்படும் மாநில UG கவுன்சிலிங் தேதியை MCC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mcc.nic.in-யை பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தந்த மாநில கவுன்சிலிங் அதிகாரிகளால் நடத்தப்படும் சுற்று 1 மாநில கவுன்சிலிங் ஜனவரி 27 அன்று தொடங்கி ஜனவரி 31, 2022 அன்று முடிவடையும். சேருவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 7, 2022 வரை ஆகும். இரண்டாவது சுற்று கவுன்சிலிங் பதிவு செயல்முறை பிப்ரவரி 15 அன்று தொடங்கி, பிப்ரவரி 18, 2022 அன்று முடிவடையும். சேர்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 24, 2022 வரை ஆகும்.

Comments

Popular posts from this blog

Zeal study lesson plan 7th Tamil LO Based Lesson plan Topic: ஒரெழுத்து ஒரு மொழி, 7ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்பு

 வணக்கம். நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு

Zeal study lesson plan 6th Tamil Lesson Plan - தமிழர் பெருவிழா -6ஆம் வகுப்பு தமிழ் கற்றள் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்பு

 வணக்கம். நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு

Zealstudy Whatsapp group